தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த படகு அலங்கார போட்டி

Published On 2024-05-23 06:09 GMT   |   Update On 2024-05-23 06:09 GMT
  • 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.
  • அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இன்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அரசுத்துறை சார்பாக படகு அலங்கார அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முதல் பரிசை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தட்டிச் சென்றது. 2வது பரிசை மீன்வளத்துறையும், 3வது பரிசை சுற்றுலாத்துறையினரும் பெற்றனர்.

அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News