செய்திகள்
தற்கொலை

செங்கிப்பட்டி அருகே வாலிபர் தற்கொலை

Published On 2019-08-12 12:24 GMT   |   Update On 2019-08-12 12:24 GMT
செங்கிப்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே துருசுப்பட்டியை சேர்ந்த காமராஜ் மகன் வேல்முருகன் (வயது22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதில் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News