செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-07-08 08:28 GMT   |   Update On 2019-07-08 08:28 GMT
மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) கோரிக்கை வைத்தார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு அவர்களை அழைத்து பேச முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.



இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகவே வழக்கு இருக்கும்பட்சத்தில் அதுபற்றி இங்கே விவாதிக்க முடியாது என்றார்.

Tags:    

Similar News