search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ போராட்டம்"

    அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த கூளநாயக்கன் பட்டி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 69 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பல்வேறு நிலைகளில் முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மாணவர்களின் நலன் முக்கியம். மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதிகம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் முதலில் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு பணிக்கு திரும்பவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 9 லட்சத்து 12 ஆயிரத்து 736 குடும்பங்களுக்கு 37 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×