search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayakumar"

    • வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
    • சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    * சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

    * பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.

    * வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    * என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.

    * வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.

    * பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    * சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். பா.ஜ.க-வால்தான் தோற்றேன் - ஜெயக்குமார்
    • 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான் - ஜெயக்குமார்

    சென்னையில் இன்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்களுடைய ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெயித்திருப்பேன், ராயபுரத்தில் நான் எல்லாம் தோற்க்கிற ஆளா, நான் மனம் திறந்து சொல்கிறேன், இதுவரை சொல்லவில்லை. நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். தோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன்; நான் யாரால் தோற்றேன், பா.ஜ.க-வால்தான் தோற்றேன்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய ஆள். பா.ஜ.க இருந்ததனால் என் தொகுதி ராயபுரத்தில் 40,000 சிறுபான்மை இன மக்கள் ஓட்டு போனது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு போனது; அவர்களுக்கு என் மேல் கோபம் கிடையாது. அப்போதே அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பா.ஜ.க-வை கழட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் வீண் சுமைதான் என்று சொன்னேன். சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அதே மாதிரி நேரம் வந்தது கழட்டி விட்டுவிட்டோம்.

    பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டிய ஆள். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன்; பாஜக இருந்ததால் இப்பொழுது நான் ஜீரோவில் இருந்து ஓடுகிறேன். தி.மு.க நாற்பதில் இருந்து ஓடுகிறார்கள் அப்படி என்றால் யார் முன்னாடி செல்வார்கள், இதுதான் காரணம். தமிழ்நாடு முழுக்க பார்த்தீர்கள் என்றால் 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான்" என்று கூறினார்.

    பாஜக குறித்து ஜெயக்குமார் பேசியது தொடர்பாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்கு பதில் அளித்த அவர், "கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு." என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    • எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது.
    • பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

    சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் கூறியதாவது:

    2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு ஜெயக்குமார் "இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே பறிபோது என்றும், இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

    நானெல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? நான் இப்போது மனம் திறந்து சொல்கிறேன். 25 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக இந்த ராயபுரத்தில் இருந்தேன். தோல்வி என்பதையே அறியாத ஆள் நான். பாஜகாவால் தான் தோற்றேன். பாஜகா என்று ஒன்று இல்லை என்றால் நானெல்லாம் சட்டமன்றத்தில் இருந்திருப்பேன். எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது. என் மீது எனது தொகுதி மக்களுக்கு எந்தவித கோபமும் கிடையாது. அப்போதே என் தொகுதி மக்கள் கூறினார்கள் பாஜகவை கழட்டி விட்டுவிடுங்கள் என்று, நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான்.. வேறு என்ன செய்வது.. சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என்று கூறினோம் அதே போல் இப்போது கழட்டி விட்டுவிட்டோம். பாஜக வேஸ்ட் லக்கேட், அந்த பேட்டி இனிமேல் ஓடாத பேட்டி, ஓடாத வண்டி, பழைய மோட்டார் சைக்கில் என்று நினைத்து கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

    • நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்தது.

    முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை குடிமகன் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள், இலங்கை மற்றும் இங்கிலாந்து செல்ல சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, முருகன் உள்ளிட்டோருக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கு நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததாகவும் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் கூறினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

    • போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
    • தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் ஜாபர் சாதிக் நிச்சயம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதன் மூலம் தி.மு.க. கலகலத்து போகும். போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.
    • அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம்.

    சென்னை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜி.யு.போப் பற்றி கவர்னர் தேவையற்ற கருத்தை கூறி உள்ளார்.

    அதிமுகவின் போராட்டத்தை திசை திருப்பவே கவர்னர் அவ்வாறு பேசி உள்ளார்.

    திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பது கவர்னர் பேச்சு மூலம் நிரூபணமாகிறது.

    31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்.

    அதிமுகவோடு வந்தால் எம்.பி.யாக வெற்றி பெற்று டெல்லி செல்லலாம் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர்.
    • மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர்.

    அதற்கு அவர் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    2016, 2014 இரண்டு தேர்தல்களில் தனியாக நின்றோம். அதே நேரத்தில் ஒரு கட்சி கூட்டணிக்கு விரும்பினால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதைத்தான் நான் சொன்னேன்.

    எங்கள் கட்சியை பொறுத்தவரை வாங்க வாங்க என்று யாரையும் பத்திரிகை வைத்து அழைக்கவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட கட்சியும் இல்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வருவதை கட்சி முடிவு செய்யும்.

    விடுதலை சிறுத்தைகள் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. தி.மு.க. கூட்டணி குறித்து இழுபறி இழுபறி என தகவல் வருகிறது. அதைத்தான் நானும் சொன்னேன்.

    அதை நான் சொல்லக்கூடாதா இன்னும் அவர்கள் கூட்டணி இறுதி செயப்படவில்லை?

    திமுக வெறும் சில்லறை கட்சிகளுடன் மட்டுமே இப்போது இடங்களை முடித்துள்ளது. இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு இடங்கள் இறுதியாகவில்லை.

    கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அவர்கள் வந்தால் அவர்களுக்கு தான் அதிக இடம் கிடைக்கும். திமுகவில் ஒரு இடம் கிடைக்க போவதில்லை. எந்த வண்டி வேகமாக போகிறதோ அந்த வண்டியில் தான் ஏறுவார்கள்.

    பா.ஜ.க.வை, அதிமுக கழட்டிவிட்ட பிறகு திமுக அதற்கு முன்பு சர்வாதிகாரமாக இருந்தது. இப்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவை மிரட்டுகிறார்கள். உங்களுக்கு உரிய தொகுதியை கொடுங்கள் எங்களுக்குரிய இடங்களை கொடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். இல்லையென்றால் அண்ணா திமுகவுக்கு போய்விடும் என்று சொல்கிறார்கள்.

    கெஞ்சி கூத்தாடி கட்டிப்பிடித்து அனைத்து கூட்டணியை வைத்திருக்கிறது திமுக. அது எப்போது உடையும் என்று தெரியாது. பத்து நாள் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.

    மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அது வீண் முயற்சி ஏனெனில் இது திராவிட மண்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
    • எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    செல்வப்பெருந்தகையின் கருத்துக்களை பார்த்தால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலையில் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதற்காக நாங்கள் யாரையும் எங்கள் கூட்டணிக்கு வருமாறு கெஞ்சவில்லை.

    எங்களுக்கு பயந்தே தி.மு.க. தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. உடனே ஒப்பந்தம் செய்து, உடனே கையெழுத்து போட்டு தொகுதி உடன்பாட்டை வெளியிடுகிறார்கள். இதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்னவென்றால் அவர்களை விட்டால் அ.தி.மு.க.வுக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான்.

    எனவே எங்களுக்கு பயந்தே தொகுதி பங்கீட்டை அவசர அவசரமாக முடிக்கிறார்கள். இதனால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.

    தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படுமா? அதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும். யார்-யார் எந்தெந்த கூட்டணிக்கு செல்வார்கள் என்பது இன்னும் 10 நாளில் தெரியும்.

    அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் சேர கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் எந்தெந்த கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரும் என்பதை இந்த நேரத்தில் சொல்வது சரியாக இருக்காது. எங்கள் தலைமையிலான கூட்டணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக இன்னும் 10 நாளில் தெரியும். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

    தி.மு.க. அரசு எங்களுக்கு பிடிக்காத அரசு. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசு. தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. வண்டலூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. அவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் போதை, வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது.

    மத்தியில் யானை பசிக்கு சோளப்பொரி போல தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்கிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. ஆனால் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி கொடுக்கிறது.

    மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது. மத்திய அரசு வரிப்பகிர்வு என்பதை அனைத்து மாநிலங்களுக்கும் சீராக வழங்க வேண்டும்.



    போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர்சாதிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாபர் சாதிக்கை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

    அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.

    * ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.

    • 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
    • மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாளை முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

    * மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம்.

    * 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.

    * மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    * 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.

    * நாளை சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    • தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.

    சென்னை:

    மெரினா அண்ணா சமாதியில் மரியாதை செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தி.மு.க. மாநில உரிமைகளை தாரை வார்த்து விட்டு அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. இவர்களுக்கு அண்ணாவின் பெயரை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அண்ணா வழியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்தார்கள்.

    இப்போது அதே வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வேலைகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொங்கி விட்டது. எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தி.மு.க. தொகுதி பங்கீடு செய்வதற்கு அவசரப்பட காரணம் யாரும் அவர்களை விட்டு பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.


    அதற்காகவே அவர்கள் கூட்டணி கட்சியினரை வாங்க... வாங்க.... சீக்கிரம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று அவரசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். அதனை தடுக்க முடியாது. இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் உள்ளது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அ.தி.மு.க. அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மோடியை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் மறைமுகமாக ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.
    • விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் "விஜய் மக்கள் இயக்கம்" மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மண் ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அ.தி.மு.க.வின் வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. யாரும் கை வைக்க முடியாது விஜய் தன் அறிக்கையில் தி.மு.க., பா.ஜ.க. குறித்தே விமர்சனங்களை முன் வைத்துள்ளார். புதிய, நடுநிலை வாக்காளர்களின் ஓட்டு நிச்சயம் அ.தி.மு.க.வுக்கே என்று தெரிவித்துள்ளார்.

    ×