செய்திகள்

டி.கல்லுப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தைக்கு அடி-உதை

Published On 2019-03-13 10:28 GMT   |   Update On 2019-03-13 10:28 GMT
மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரின் தந்தை கம்பால் தாக்கப்பட்டார்.

பேரையூர்:

மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வன்னிவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மகன் மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் மகள் ஜோதியை காதல் திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பழனிகுமாரின் அண்ணன் செல்லையா கேட்கச் சென்றார். மணிகண்டனின் தந்தை விஜயனை சந்தித்து அவர் இதுபற்றி கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் செல்லையா ஆத்திரமடைந்து கம்பால் தாக்கியதாக டி.கல்லுப்பட்டி போலீசில் விஜயன் புகார் செய்தார். மேலும் அவர் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட் பட்ட டி.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஞானகுரு. இவரை இடத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்னாட்சி மகன்கள் முத்துக்குமார் (25), ராஜன், சார்லஸ், சதீஷ்குமார் ஆகியோர் கல்லால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஞானகுரு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News