செய்திகள்

கனமழை எதிரொலி - நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2018-11-23 16:50 GMT   |   Update On 2018-11-23 16:50 GMT
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
நாகப்பட்டினம்:

கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கஜா புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
Tags:    

Similar News