செய்திகள்
திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை- காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் உறுதி
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார். #Thirunavukkarasar #Congress
திருச்சி:
தமிழக காங்கிரஸ் கட்சியில் உருவான கோஷ்டி பூசல் கடந்த மாதம் உச்சகட்டத்தை எட்டியது. மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என எதிர் தரப்பில் உள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். பாஜகவில் இருந்து வந்த திருநாவுக்கரசர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை மேலிடத்தில் வைத்தனர். இதனால் நிச்சயம் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.
‘திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம்’ என்றும் சஞ்சய் தத் குறிப்பிட்டார். #Thirunavukkarasar #Congress
தமிழக காங்கிரஸ் கட்சியில் உருவான கோஷ்டி பூசல் கடந்த மாதம் உச்சகட்டத்தை எட்டியது. மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என எதிர் தரப்பில் உள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். பாஜகவில் இருந்து வந்த திருநாவுக்கரசர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை மேலிடத்தில் வைத்தனர். இதனால் நிச்சயம் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில், திருச்சியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு பேசும்போது, திருநாவுக்கரசரை மாற்றும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.
‘திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம்’ என்றும் சஞ்சய் தத் குறிப்பிட்டார். #Thirunavukkarasar #Congress