செய்திகள்

திருமங்கலத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம்: வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2018-06-15 11:04 GMT   |   Update On 2018-06-15 11:04 GMT
சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேரையூர்:

திருமங்கலம் பன்னியான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சித்தாழை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சுந்தர் (வயது 30) என்பவருக்கும் இடையே கடந்த 4-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து யூனியன் அலுவலக விரிவாக்க அலுவலர் ராமுத்தாய்க்கு தகவல் கிடைத்தது. அவர் விரைந்து சென்று திருமணமத்தை தடுத்து நிறுத்தி, இரு வீட்டாருக்கும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு 11-ந் தேதி சிறுமிக்கும், சுந்தருக்கும் வீட்டிலேயே கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக விரிவாக்க அலுவலர் ராமுத் தாய்க்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து அவர், அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தார்.

மேலும் சுந்தர், அவரது பெற்றோர் கண்ணன்- பணச்செல்வி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News