செய்திகள்
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி மீது தாக்குதல்- செங்கல்சூளை அதிபர் கைது
விக்கிரவாண்டி அருகே கொடுத்த கடனை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய செங்கல்சூளை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது35). இவரது மனைவி சுமதி(30). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள கோவிந்தன்(38) என்பவரது செங்கல் சூளையில் வேலை பார்த்துவருகிறார்கள்.
குமாரிடம் செங்கல்சூளைஅதிபர் கோவிந்தன் கடனாக ரூ. 20 ஆயிரம் வாங்கி இருந்தார். அதன்பின்னர் அவர் கடன் வாங்கிய பணத்தை திருப்பிகொடுக்கவில்லை. இதனைதொடர்ந்து குமார், கடனாககொடுத்த பணத்தை கோவிந்தனிடம் கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தொழிலாளி குமாரை திட்டி தாக்கினார். இதனை தடுத்த குமாரின் மனைவி சுமதியையும் தாக்கினார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவியை தாக்கிய கோவிந்தனை கைது செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது35). இவரது மனைவி சுமதி(30). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள கோவிந்தன்(38) என்பவரது செங்கல் சூளையில் வேலை பார்த்துவருகிறார்கள்.
குமாரிடம் செங்கல்சூளைஅதிபர் கோவிந்தன் கடனாக ரூ. 20 ஆயிரம் வாங்கி இருந்தார். அதன்பின்னர் அவர் கடன் வாங்கிய பணத்தை திருப்பிகொடுக்கவில்லை. இதனைதொடர்ந்து குமார், கடனாககொடுத்த பணத்தை கோவிந்தனிடம் கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தொழிலாளி குமாரை திட்டி தாக்கினார். இதனை தடுத்த குமாரின் மனைவி சுமதியையும் தாக்கினார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவியை தாக்கிய கோவிந்தனை கைது செய்தார்.