செய்திகள்

விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23-ந்தேதி நடக்கிறது

Published On 2018-03-21 10:05 GMT   |   Update On 2018-03-21 10:05 GMT
விருதுநகரில் மார்ச் மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடை பெற உள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, மார்ச் மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடை பெற உள்ளது.

இதற்கு முன்னாள் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை தேர்வு செய்துள்ளனர்.

23-ந் தேதி நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 3 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிட்டர் பிரிவினர் மட்டும்) பயின்றவர்கள் மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தில் முகவராக 30வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட பணிநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பிற நிறுவனங்களும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News