செய்திகள்

புதுவையில் 11 மாத கை குழந்தையுடன் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-02-14 12:15 GMT   |   Update On 2018-02-14 12:15 GMT
புதுவையில் 11 மாத கை குழந்தையுடன் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 37).

இவர் புதுவையில் பிளம்பராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வானூரை அடுத்த கழுப்பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்திரகலா (33) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 மாதம் ஆன யூவிதா என்ற பெண் குழந்தை உள்ளது.

சீனிவாசன் வேலைக்கு வசதியாக புதுவையை அடுத்த பெரிய காலாப்பட்டு பிள்ளையார்கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டின் 2-வது தளத்தில் குடியேறி வசித்தனர்.

நேற்று காலை சீனிவாசன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சந்திரகலா, கைக்குழந்தையுடன் தனியாக இருந்தார். வழக்கமாக கணவர் வேலைக்கு சென்றவுடன் சமையல் செய்வதற்கான பொருட்கள் வாங்க சந்திரகலா கீழே வருவார். ஆனால் நேற்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குழந்தையின் அழுகை சத்தமும் கேட்கவில்லை.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர், சந்திரகலாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப்படவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, சந்திரகலா, 11 மாத கைக்குழந்தையும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள், வீட்டின் கதவை உடைத்து மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய சந்திரகலா மற்றும் குழந்தையின் உடலை மீட்டனர். இது பற்றி கணவர் சீனிவாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு வந்து மனைவி மற்றும் குழந்தையின் உடலை பார்த்த கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

காலாப்பட்டு போலீசார் சந்திரகலா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, சந்திரகலா, குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து கணவர் சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News