செய்திகள்
இரு மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.