செய்திகள்
முசிறியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி:
முசிறி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், சேகர் ஆகியோர் முசிறி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி பழைய பேருந்து நிலையம் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த உமையாள்புரத்தை சேர்ந்த பிச்சை (வயது 42), அதே ஊரைச் சேர்ந்த பெரிய சாமி(37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரிடமிருந்தும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.