தமிழ்நாடு

ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை- டி.என்.ஏ. பரிசோதனைக்காக எலும்புகள் அனுப்பி வைப்பு

Published On 2024-05-08 07:24 GMT   |   Update On 2024-05-08 07:24 GMT
  • எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார்.
  • சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமரணம் வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஜெயக்குமாரின் சகோதரர், மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வழக்கு தொடர்பாக பல்வேறு விபரங்களை போலீசார் அவர்களிடம் கேட்டறிந்தனர்.

இதற்கிடையே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார். எனவே மீட்கப்பட்ட சடலம் ஜெயக்குமார் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ.பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News