செய்திகள்

நாகர்கோவிலில் ஏ.டி.எம். கார்டை எடுத்து ரூ.76 ஆயிரம் திருடிய பெண்

Published On 2017-11-12 16:08 GMT   |   Update On 2017-11-12 16:08 GMT
நாகர்கோவிலில் வீட்டில் வேலை செய்த பெண் ஏ.டி.எம். கார்டை எடுத்து ரூ.76 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டார். அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்டர் சேம்ராஜ். இவரது மகன் யூஜின் சுந்தர். இவர் பெங்களூருவில் தொழில் செய்து வருகிறார். இவர் தனது பெற்றோரை கவனிப்பதற்காக மார்த்தாண்டம் கண்ணன் கோடு பகுதியை சேர்ந்த இந்திரா என்பவரை வேலைக்கு வைத்தார்.

இந்த நிலையில் யூஜின் சுந்தர் பெற்றோரின் வங்கி ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் திருடப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஏ.டி.எம்.  கார்டை மாற்றி விட்டு புதிய ஏ.டி.எம். கார்டை வங்கியில் சென்று வாங்கினார்கள். அதன் பிறகு தொடர்ந்து வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது மகன் யூஜின் சுந்தரிடம் தெரிவித்தனர்.

அவர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதாய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டு வேலை செய்து வந்த இந்திரா ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று அதில் இருந்து ரூ.76 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் இந்திரா மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News