search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் திருட்டு"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சம்புவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 48). பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் ஆரணி தனியார் வங்கிக்கு பைக்கில் சென்றார்.

    வங்கியில் இருந்து தனது கணக்கில் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்தார். ஆரணி டவுன் பெரியகடை வீதியில் உள்ள நகைகடைக்கு சென்று தன் பெயரில் வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சென்றார்.

    இதனால் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையான ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு நகை கடையின் உள்ளே சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பைக்கின் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    பின்னர் வெளியே வந்த ரகு வீட்டிற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பைக்கின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம கும்பல் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    அதிக நடமாட்டம் உள்ள ஆரணி டவுன் பகுதியில் பட்டப்பகலில் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 62), தனியார் பள்ளி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (51). இவர் வழக்கம்போல் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு நூறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமராவில் பணம் திருடும் காட்சிகள் பதிவு
    • போலீஸ் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியா(50) என்பவர்.

    புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் டீலர் ஷோரூம் நடத்தி வருகிறார்.அதன் பக்கத்தில் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(27) என்பவர் மீன் வறுவல் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சத்தியா என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை நூதனமாக உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6500 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்கள், கோபி என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து ரூ.5000 ஆகிவற்றை திருடிக்கொண்டு ஷட்டரை அப்படியே திறந்து விட்டு சென்றுள்ளார்.

    பின்னர் நேற்று காலை கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கடைகள் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கேமராவை பார்த்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவை சிக்காமல் இருப்பதற்கு ஒரு கேமராவை திசையை வேறு பக்கமாக திருப்பி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைக்குள் உள்ள கேமராவை ஆப் செய்து அதன் பிறகு தனது கைவரிசையை காட்டி கல்லாவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள் சத்தியா மற்றும் கோபி ஆகியோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர்.
    • நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இதனால் பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ள இடங்களில் கூட்டல் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் பக்தர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடி வருகின்றனர்.

    திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விமலா குமாரி டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபர்கள் தமிழகத்தில் நெய்வேலியை சேர்ந்த வேலு, ராஜேந்திரன் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 65 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தன.

    நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
    • திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்றிரவு மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    நகை திருட்டு

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுப்ரமணியம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி வீட்டில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் முத்து மனைவி செல்வி (37). கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2வது மகளுடன் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் வசித்து வருகிறார். தேவாரம் பஸ்நிலையத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து தேவாரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
    • மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் முத்துராஜ்(வயது 32). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2-ந்தேதியில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் நேற்று மதியம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தார். டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.14 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒட்டப்பிடாரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    நெல்லையை அடுத்த தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.

    அதனை அப்படியே வைத்து விட்டு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பழங்கள் வாங்கிவிட்டு திரும்பவும் மோட்டார் சைக்கிள் அருகே வந்தார்.

    அப்போது கவரில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சீதாலெட்சுமி வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    முத்துராஜ் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்தபோதில் இருந்து மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததும், அவர் பழக்கடைக்கு சென்றதை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி
    • 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி சப்- இன்ஸ்பெக்டர் வேல் குமார் தலைமையில் அதே பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த தால் அவரிடம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அவர் குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ரிஷி என்கிற ரதுஷன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரி கடையில் பணம் மற்றும் லேப்டாப் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் ரிஷியை கைது செய்தனர். இந்த கொள்ளையில் மற்றொரு நபரும் ஈடுபட்டு இருப்பதால் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.
    • கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

    மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 கோவில்கள் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு மலையடிவாரத்தில் உள்ள வல்லாண்டப்பன் கோவிலில் மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்து அதில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். இதேபோல் வல்லாண்டப்பன் கோவில் அருகே உள்ள தஞ்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலையும் உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றனர்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அரியூர் போலீசில் புகார் செய்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் திருட்டு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(வயது 63), இவர் காவேரிப்பாக்கம் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இவரது தம்பியின் மகள் திருமணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நள்ளிரவு வீடு திரும்பினர்.

    பின்னர் அதிகாலை 4-மணியளவில் மீண்டும் குடும்பத்தினருடன் ஆரணி திருமணத்திற்கு சென்று விட்டு, நேற்று காலை 11-மணி அளவில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தத. இதில் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×