search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
    X

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

    • சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளியே எடுத்து சென்றனர்.
    • இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மல்லிபாளை யம் பகுதியில் அன்னமார் கோவில் உள்ளது. இந்த கோவில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திறக்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடப்பது வழக்கம்.

    அதே போல் கடந்த அமா வாசை அன்று கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளி யே எடுத்து சென்ற னர். தொடர்ந்து அவர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1500 பணத்தை திருடி விட்டு உண்டியலை அங்கேயே ேபாட்டு விட்டு சென்று விட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கோவில் பூசாரி தெய்வசிகாமணி (55) என்பவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×