என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செல்போன் கடையில் பணம் திருடிய வாலிபர்
- போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
- ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.
மதுரை
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.
உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்