செய்திகள்
கார் விபத்தில் 6 பேர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியானதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி, தெக்கலூர் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், ஸ்கார்ப்பியோ வாகனமும், மோதிய விபத்தில், ஸ்கார்ப்பியோ கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த, கந்தசாமி, மணி (எ) முத்துசாமி மற்றும் ரத்தினம், எடப்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் (எ) ராமு, கதிர்வேல், நல்லசாமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் வாகன ஓட்டுநருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவினாசி, தெக்கலூர் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், ஸ்கார்ப்பியோ வாகனமும், மோதிய விபத்தில், ஸ்கார்ப்பியோ கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த, கந்தசாமி, மணி (எ) முத்துசாமி மற்றும் ரத்தினம், எடப்பாடி வட்டத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் (எ) ராமு, கதிர்வேல், நல்லசாமி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் வாகன ஓட்டுநருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.