search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி"

    ரூ. 73 கோடியில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் நகர் நிர்வாக அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். #edappadipalanisamy

    சென்னை:

    சென்னை எம்.ஆர்.சி. நகர் சாந்தோம் பிரதான சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் ரூ. 73 கோடி செலவில் நகர் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிட திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள், துணை சபாநாய கர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகின்றனர். #edappadipalanisamy

    ×