செய்திகள்

திருவாடானை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-08-17 13:19 GMT   |   Update On 2017-08-17 13:19 GMT
திருவாடானை அருகே கணவர் வேலைக்கு செல்லாததால் விரக்தியடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த கொண்டார்.

ராமநாதபுரம்:

திருவாடானை அருகே உள்ள நெய்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி செல்வி (வயது 25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கணவன்-மனைவி 2 பேரும் தேவகோட்டையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக ஜேம்ஸ் வேலைக்கு செல்ல வில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. செல்வி பலமுறை கூறியும் ஜேம்ஸ் வேலைக்கு செல்ல மறுத்தார்.

இதனால் விரக்தியடைந்த செல்வி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செல்வியின் தந்தை சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News