தமிழ்நாடு

இலவச லேப்டாப் திட்டம்: இந்த ஆண்டும் நொண்டிச்சாக்கு சொல்வீங்களா? எடப்பாடி பழனிசாமி

Published On 2024-05-26 09:30 GMT   |   Update On 2024-05-26 09:30 GMT
  • திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
  • இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏழை எளிய மாணவர்கள் பயனுற்று வந்தனர்.

இந்த நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது."

"இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது."

"மு.க. ஸ்டாலின்அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News