செய்திகள்
விபத்தில் பலியான சுந்தரி

திருவெண்ணைநல்லூர் அருகே விபத்து: தாய்-மகள் உடல் நசுங்கி பலி

Published On 2017-08-03 10:39 GMT   |   Update On 2017-08-03 10:39 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய், மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. விவசாயி. இவரது மனைவி சுந்தரி (வயது 27). இவர்களுக்கு சஷ்டா(7), வேல்விழி(4), பூஜா (1) என்று 3 மகள்கள் இருந்தனர்.

நேற்று இரவு ரஜினி தனது மனைவி சுந்தரி மற்றும் பூஜாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவெண்ணைநல்லூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பையூருக்கு திரும்பினார்.

தொட்டிகுடிசை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது, அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திடீரென்று ரஜினி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயடைந்த ரஜினி உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சுந்தரியும், பூஜாவும் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தாய்-மகள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News