search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவெண்ணைநல்லூர்"

    திருவெண்ணைநல்லூர் அருகே மனைவி சமையல் செய்யாததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), விவசாயி. இவருக்கு ஜெயந்தி (40) என்ற மனைவியும், 3 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை வழக்கம்போல் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவி ஜெயந்தியிடம் சாப்பாடு தருமாறு கேட்டார். அதற்கு ஜெயந்தி தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால் சமையல் செய்யவில்லை என்று கூறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏறபட்டது. இதில் மனமுடைந்த கண்ணன் வீட்டில்இருந்து வெளியே சென்றார்.

    பின்னர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். திருவெண்ணைநல்லூர் சுடுகாட்டு பகுதிக்கு சென்று படுத்துக்கொண்டார். இரவு நீண்டநேரமாகியும் கண்ணன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கண்ணன் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    திருவெண்ணைநல்லூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி.கொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19).

    இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த ரமேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் ரமேசுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. #Tamilnews

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்களம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை கோயம்பேட்டில் ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயலலிதா(வயது 25). இவர்களுக்கு கவுதமன்(3½) என்ற மகனும், பூமிகா(1) என்ற மகளும் உள்ளனர்.

    ஜெயலலிதா தனது குழந்தைகளுடன் மேலமங்களத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மேலமங்களத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவதன்று விக்னேசை வேலைக்கு செல்லும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த விக்னேஷின் உறவினர்களும் ஜெயலலிதாவை திட்டினர்.

    இதனால் மனம் உடைந்த ஜெயலலிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. ஜெயலலிதா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அவரை மீட்டனர். இதில் ஜெயலலிதாவிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஜெயலலிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேங்காய் பறிப்பதற்காக தென்னைமரத்தில் ஏறிய வாலிபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 23). இவர் வீட்டுக்கு தேவையான தேங்காய் பறிப்பதற்காக தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னைமரத்தில் ஏறினார். அங்கு தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருவெண்ணைநல்லூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி தங்கபொன்னு (வயது 65). இவர் வீட்டில் வைத்து திடீரென வி‌ஷம் குடித்தார். 

    மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் தங்கபொன்னு பரிதாபமாக இறந்தார். 

    இதுப்பற்றி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தங்கபொன்னுக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
    ×