செய்திகள்

சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2017-06-08 10:12 GMT   |   Update On 2017-06-08 10:12 GMT
சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து புதுவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி:

டெல்லியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை 2 பேர் தாக்க முயன்றனர்.

இதனை கண்டித்து புதுவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று சாரம் அவ்வை திடலில் ஜீவானந்தம் சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். புதுவை நகர செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராமராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் பெருமாள், முருகன், ராமச்சந்திரன், வின்சென்ட், உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News