செய்திகள்
சோழவந்தான் அருகே மது விற்ற பெண் கைது
சோழவந்தான் அருகே போதை ரசாயன பவுடர் பயன்படுத்தி மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 15 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட பேரணை சாலையில் வைகை ஆற்று கரை உள்ளது. இங்குள்ள புறம்போக்கு இடத்தில் போதை ரசாயன பவுடர் பயன்படுத்தி சிலர் மது உற்பத்தி செய்து விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கெலிஸ்டஸ் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழு வினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு காடுபட்டியை சேர்ந்த சுசீலா (வயது45 ) என்ற பெண் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.