ஆன்மிகம்

பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2018-05-16 04:41 GMT   |   Update On 2018-05-16 04:41 GMT
வைகாசி மாத பிறப்பையொட்டி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் நேற்று, கார்த்திகை விழா, வைகாசி மாத பிறப்பு மற்றும் அமாவாசை போன்றவை ஒரே நாளில் வந்தது. இதையொட்டி சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. மேலும் மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே சுவாமி தரிசனம் செய்ய, பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். மின்இழுவை ரெயில்நிலையம், ரோப் கார் உள்ளிட்டவைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News