ஆன்மிக களஞ்சியம்

குழந்தை வரம் தரும் பிரத்தியங்கரா தேவி

Published On 2024-05-05 11:30 GMT   |   Update On 2024-05-05 11:30 GMT
  • புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
  • சிவகங்கை ஸ்ரீ மகாபஞ்சமி பிரத்யங்கராதேவி கோவிலில் இந்த பூஜை நடைபெறுகிறது.

ராமாயண காலத்தில் அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜனுக்கு பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் மனம் புழுங்கி வந்தாராம்.

புத்திய காமேஷ்டி யாகத்தை நடத்தினால் குழந்தை செல்வம் கண்டிப்பாக கிடைத்து விடும் என ஏராளமான ரிஷிகள் கூறியதை அடுத்து நம்பிக்கையுடன் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினாராம்.

அதன்பின் 3 மனைவிகளுக்கு ராமர், லெட்சுமணன், பரதன், சத்துகென் ஆகியோர் பிறந்தார்கள் என ராமாயண வரலாறு கூறுகிறது.

தற்போது ஏராளமான குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வேண்டி கோவில் மற்றும் புன்னியஸ்தலங்களுக்காக செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக ஸ்ரீமகாபுத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.

Tags:    

Similar News