ஆன்மிக களஞ்சியம்

பிரதோஷ விரதம் இருக்கும் முறை

Published On 2026-02-14 11:09 IST   |   Update On 2026-02-14 11:09:00 IST
  • கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு.
  • சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

காலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ நாமத்தை சொல்லிய படி இருக்க வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.

நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டாம்.

கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை சிவபெருமான் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

Tags:    

Similar News