ஆன்மிக களஞ்சியம்

சிவபெருமானின் மறு அவதாரம் சரபேஸ்வரர்

Published On 2024-05-05 10:13 GMT   |   Update On 2024-05-05 10:13 GMT
  • சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.
  • இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

இரணியனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை உட்கொண்டதால் அவனுடைய ஆணவம் இவரிடம் வந்து சேர்ந்தது, அதுமட்டுமல்ல, இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் நரசிம்மத்திற்கு வந்து சேர்ந்து விட்டபடியால் கோபம் தணிவதற்குப் பதில் மேலும் கோபம் மேலிட கர்ஜனை செய்து கொண்டே அண்ட சராசரங்களையும் நடுநடுங்க வைத்தார்.

நரசிம்மத்தின் கோபத்தைத் தணிவிக்க பிரகலாதனும் தேவர்களும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.

ஆனால், அவரின் கோபம் தணிந்த பாடில்லை.

இறுதியாகத் தேவர்கள் எல்லோரும் சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள்.

தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான் தன் பூதகணங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.

ஆனால், நரசிம்மத்தின் ஆவேச சக்தியை அவராலும் தணிக்க முடியாமல் போக வீரபத்திர வடிவத்திலிருந்து ருத்ர மூர்த்தியாம் சிவபெருமான் சரபபட்சியும், மனித உடலும், மிருகமும் கலந்து ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார்.

சரபபட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.

இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார்.

Tags:    

Similar News