ஆன்மிக களஞ்சியம்

தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம மூர்த்தி

Published On 2024-05-05 10:11 GMT   |   Update On 2024-05-05 10:11 GMT
  • பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.
  • மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

அப்படியானால் அவனை என் கதையாலே அடித்து அவன் கதையை முடிக்கிறேன் பார் என்றவாறே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி தூணை ஓங்கி அடித்தான்.

தூண் இரண்டாகப் பிளந்து விழுந்தது.

பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன்.

மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நரசிங்க வடிவமாக இரணியனின் முன் தோன்றினார்.

என்ன, ஏது என்று நிதானிப்பதற்குள் இரணியன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது.

விலங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல், தேவனாகவும் இல்லாமல் கூட்டுக் கலவையாகத் தோன்றிய அந்த நரசிங்கம்.

இரவும் பகலுமற்ற மாலை வேளையில், பூமியில் கொல்லாமல் தன்னுடைய மடியில் இரணியகசிபுவைச் சாய்த்து அவன் உடலைத் தன் கை நகங்களால் பிளந்து ரத்தத்தைக் குடித்துக் கொன்றது.

தேவர்களும் மக்களும் முனிவர்களும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள்.

ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

அதிபயங்கரமான நீண்ட கோரைப் பற்களுடன், தொங்குகின்ற நீண்ட நாக்குடன் கோபத்தினால் சிவந்த கண்களுடனும் கூர்மையான நீண்ட நகங்களுடன் தோன்றிய நரசிம்மம் இரணியனைக் கொன்று முடித்த பின்னும் கோபம் குறையாதவராகவே காணப்பட்டது.

Tags:    

Similar News