ஆன்மிகம்

கணபதியின் வடிவ தத்துவம்

Published On 2018-03-06 08:18 GMT   |   Update On 2018-03-06 08:18 GMT
தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’. கணபதியின் உருவ வடிவத்தின் தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறிய கண்கள் - கூர்ந்து கவனி.

பெரிய காதுகள் - நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.

நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு தேடு.

சிறிய வாய் - பேசுவதைக் குறை.

பெரிய தலை - பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத்தையும் ஜீரணித்து முன்னேறு.
Tags:    

Similar News