ஆன்மிகம்

பெருமாளுக்கு மஞ்சள் ஆடை

Published On 2018-02-14 09:33 GMT   |   Update On 2018-02-14 09:33 GMT
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவிலில் மஞ்சள் நிற ஆடை, இத்தல பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
நவ திருப்பதி என்று அழைக்கப்படும் 9 வைணவத் தலங்கள், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள், குருவின் அதிபதியாக விளங்குகிறார். இதனால் தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கப்படும் மஞ்சள் நிற ஆடை, இத்தல பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

மேலும் கொண்டைக்கடலை மாலையும் சாத்தி வழிபடுகிறார்கள்.
Tags:    

Similar News