செய்திகள்
கோப்புப்படம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

Published On 2019-01-08 09:14 GMT   |   Update On 2019-01-08 09:59 GMT
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக திடமான கொள்கை முடிவு எடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதை அறிய விரும்புகிறேன். உடனடியாக அமைச்சரவையை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததை கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


வெளிநடப்புக்கு பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், " ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடமான கொள்கை முடிவு எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று முதலமைச்சரை நான் வலியுறுத்தினேன். ஆனால் எதுவுமே நடக்காததால் தமிழக அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்" என்று குறிப்பிட்டார்.

இதன் பின்னர், சிறிது நேரம் நடைபெற்ற சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  #DMK #MKStalin #SterlitePlant #TNAssembly
Tags:    

Similar News