இந்தியா

திருவனந்தபுரம் தொகுதியில் 4-வது முறையாக வெற்றி பெறுவேன்!

Published On 2024-04-26 06:40 GMT   |   Update On 2024-04-26 06:40 GMT
  • காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார்.
  • தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

கேரளா:

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இங்கே வந்துள்ளேன்.

தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். மூன்று தேர்தல்களிலும் மக்கள் எனக்கு அளித்த அதே உற்சாகத்தையும், ஆதரவையும், நல்லெண்ணத்தையும் எனக்கு அளித்துள்ளனர். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.


Tags:    

Similar News