என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு - முன்னாள் போலீஸ்காரர் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை
தேனி:
தேனி அருகே வீரபாண்டி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மந்திரி.தேனி யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். உறவினர்களான இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. எனவே இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கோடீஸ்வரன், மனைவி தெய்வக்கனி, மகன் ரமேஷ்குமார், உறவினர்கள் செல்வம், செல்வராணி, கோபிகண்ணன், சந்திரா, மலைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.
இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நடைபெறும் போது மலைச்சாமி இறந்து போனார்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரன், ரமேஷ்குமார், தெய்வக்கனி உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார். ஆயுள்தண்டனை விதிக்கபட்ட ரமேஷ் குமார் போலீஸ்காரர் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்