என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகை கொள்ளை
Byமாலை மலர்27 May 2017 7:34 AM GMT (Updated: 27 May 2017 7:34 AM GMT)
அரியலூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூரை சேர்ந்தவர் சுந்தரராமன். இவர் பெரிய கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இன்று காலை அவரது கடை முன்பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுந்தரராமனுக்கு ததவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு சென்று பார்த்த போது கடைக்குள் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் லாக்கரில் இருந்த 16 பவுன் நகை மற்றும் 84 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள்மூலம் சோதனை நடத்தப்பட்டது.
நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கடையின் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 6 வருடத்திற்கு முன்பு சுந்தரராமனின் கடையை உடைத்து 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரை சேர்ந்தவர் சுந்தரராமன். இவர் பெரிய கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இன்று காலை அவரது கடை முன்பக்க கதவின்பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக சுந்தரராமனுக்கு ததவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு சென்று பார்த்த போது கடைக்குள் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் லாக்கரில் இருந்த 16 பவுன் நகை மற்றும் 84 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார் கிரி சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள்மூலம் சோதனை நடத்தப்பட்டது.
நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் மர்மநபர்கள் கடையின் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 6 வருடத்திற்கு முன்பு சுந்தரராமனின் கடையை உடைத்து 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X