search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா, வங்காளதேசம் பங்கேற்பு
    X

    இலங்கையில் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா, வங்காளதேசம் பங்கேற்பு

    இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் பங்கேற்கின்றனர். #SriLanka #India #Bangladesh
    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதி இந்த தொடர் முடிகிறது.

    அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது.

    மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    6-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகள் அனைத்தும் கொழும்பு பிரேமதா ஸ்டேடியத்தில் மின்னொளியில் நடக்கிறது.

    போட்டி அட்டவணை:-

    மார்ச் 6 - இலங்கை vs இந்தியா

    மார்ச் 8 - வங்காளதேசம் vs இந்தியா

    மார்ச் 10 - இலங்கை vs வங்காளதேசம்

    மார்ச் 12 - இந்தியா vs இலங்கை

    மார்ச் 14 - இந்தியா vs வங்காளதேசம்

    மார்ச் 16 - வங்காளதேசம் vs இலங்கை

    மார்ச் 18 - இறுதிப்போட்டி
    Next Story
    ×