என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி 2017: லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி
Byமாலை மலர்16 Sep 2017 5:26 PM GMT (Updated: 16 Sep 2017 5:26 PM GMT)
புரோ கபடி 2017ன் இன்றைய லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
புரோ கபடி 2017ன் இன்றைய லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்று நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 45-42 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாட்னாவின் பிரதீப் நர்வால் 15 தொடுபுள்ளிகளும், உ.பி.யின் நிதின் தோமர் 14 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.
முன்னதாக நடந்த மற்றொரு 'பீ' பிரிவு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி 26-26 என சமனில் முடிந்தது.
இன்றைய போட்டிகளின் முடிவில் பாட்னா அணி 46 புள்ளிகளுடன் பீ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, உ.பி. யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. பெங்கால் வாரியர்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்று நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 45-42 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாட்னாவின் பிரதீப் நர்வால் 15 தொடுபுள்ளிகளும், உ.பி.யின் நிதின் தோமர் 14 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.
முன்னதாக நடந்த மற்றொரு 'பீ' பிரிவு லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி 26-26 என சமனில் முடிந்தது.
இன்றைய போட்டிகளின் முடிவில் பாட்னா அணி 46 புள்ளிகளுடன் பீ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, உ.பி. யோத்தா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளன. பெங்கால் வாரியர்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X