search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி
    X

    நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது - மாயாவதி

    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    Next Story
    ×