search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும்: தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

    மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact
    மும்பை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார். #ShivSena #BJP #LokSabhaelections #DevendraFadnavis #ShivSenaBJPpact 
    Next Story
    ×