search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்றுதிரண்டால் இலங்கையைப் போல் காங்கிரஸ் அழிந்துப் போகும்- மனோகர் பரிக்கர்
    X

    பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்றுதிரண்டால் இலங்கையைப் போல் காங்கிரஸ் அழிந்துப் போகும்- மனோகர் பரிக்கர்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்றுதிரண்டு உழைத்தால் ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதிபோல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும் என மனோகர் பரிக்கர் குறிப்பிட்டுள்ளார். #Congresswillmeet #fatelikeSriLanka #ManoharParrikar
    கோவா:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் பா.ஜ.க.தலைவர் அமித் ஷா மாநில வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அவ்வகையில், கோவாவில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தால் திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை ஒரு நாளைக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    அவரை தொடர்ந்து பேசிய கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர், ‘வரும் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும். பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும் என நமது கட்சி தொண்டர்கள் அனைவரும் சபதமேற்க வேண்டும். மனவேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

    இந்த மனஉறுதியுடன் சுமார் 25-30 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதிபோல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும்’ என குறிப்பிட்டார். #Congresswillmeet #fatelikeSriLanka #BJPworkerstogether #ManoharParrikar
    Next Story
    ×