search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் - சிவசேனா கருத்து
    X

    வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் - சிவசேனா கருத்து

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது. #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    மும்பை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

    தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 
     
    பிரியங்காவுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள்  என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷா கயாண்டே கூறுகையில், பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி குணங்கள் தென்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியின் முகத்தை காண்பார்கள் என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
    Next Story
    ×