என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபேல் ஆலோசனை கூட்டம் - காங்கிரஸ் குழுவினருடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு
Byமாலை மலர்29 Aug 2018 11:38 PM GMT (Updated: 29 Aug 2018 11:38 PM GMT)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் குழுவினரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். #Congress
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் ராகுல் காந்தி. பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமானம் தொடர்பான ஊழல் குறித்து ஆலோசிக்கவும், ரபேல் போர் விமானம் தொடர்பான உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது.
இந்த ஆலோசனை கூட்டம் கடந்த 17-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் குழுவினரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரசினர் கூறுகையில், பாஜக ஆட்சியின் பெரிய ஊழலாக கருதப்படும் ரபேல் ஊழல் குறித்து நாட்டு மக்களிடம் விரிவாக விளக்க உள்ளோம். கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடியின் வீட்டை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர். #Congress #RahulGandhi #Rafale
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X