என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமுகவை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்... சீட் இல்லை என்று திருப்பி அனுப்பிய துரைமுருகன்
Byமாலை மலர்6 March 2019 10:46 AM GMT (Updated: 6 March 2019 10:46 AM GMT)
தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில் சீட் இல்லை என்று கூறி அனுப்பியதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMDK #DMK #DuraiMurugan
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர்.
தனது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்தது பற்றி தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் சேர விருப்பமில்லை என தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முதலில் சுதீஷ் தொலைபேசியில் பேசி திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணிக்கு வர விரும்புவதாக சுதீஷ் கூறினார்.
நேரில் சந்தித்தவர்களிடமும் தெளிவாகக் கூறிவிட்டோம். கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணிக்கு வருவதாக விருப்பம் தெரிவித்தது பற்றி ஸ்டாலினிடம் பேசுவேன். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்தித்ததாக இளங்கோவன் தெரிவித்தார். #DMDK #DMK #DuraiMurugan
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர்.
தனது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்தது பற்றி தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் சேர விருப்பமில்லை என தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முதலில் சுதீஷ் தொலைபேசியில் பேசி திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணிக்கு வர விரும்புவதாக சுதீஷ் கூறினார்.
தே.மு.தி.க. இணைந்தால் கொடுப்பதற்கு எங்களிடம் போதிய சீட் இல்லை தருவதற்கு, மன்னிக்கவும் என சுதீஷிடம் கூறிவிட்டேன். அ.தி.மு.க. உடனான தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு இருக்கிறது.
நேரில் சந்தித்தவர்களிடமும் தெளிவாகக் கூறிவிட்டோம். கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணிக்கு வருவதாக விருப்பம் தெரிவித்தது பற்றி ஸ்டாலினிடம் பேசுவேன். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்தித்ததாக இளங்கோவன் தெரிவித்தார். #DMDK #DMK #DuraiMurugan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X