என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் - நாளை காலை திமுக தேர்தல் அறிக்கை வெளியாகிறது
Byமாலை மலர்18 March 2019 1:56 PM GMT (Updated: 18 March 2019 1:56 PM GMT)
பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியாகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்கிறார். #LSPolls #DMK #MKStalin #Manisfesto
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலைமையில்காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைமை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என இன்று மாலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திப்பார் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMK #MKStalin #Manisfesto
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X