என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர்- பெண் பலி
Byமாலை மலர்26 Feb 2019 10:30 AM GMT (Updated: 26 Feb 2019 10:30 AM GMT)
பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர், பெண் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X