search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக-அதிமுக கூட்டணி, தொகுதி பங்கீடு: இறுதி செய்ய நாளை அமித் ஷா சென்னை வருகை
    X

    பாஜக-அதிமுக கூட்டணி, தொகுதி பங்கீடு: இறுதி செய்ய நாளை அமித் ஷா சென்னை வருகை

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். #AIADMKBJPpact #Loksabhapolls #amitshah
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
     
    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் இன்றிரவு தெரிவித்துள்ளன. #AmitShah #AmitShahvisitChennai #AIADMKBJP #AIADMKBJPpact #Loksabhapolls
    Next Story
    ×