search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை- உறவினர் மீது வழக்கு
    X

    5-ம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை- உறவினர் மீது வழக்கு

    மார்த்தாண்டம் அருகே 5-ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து உறவினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி யில் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    அரசு டாக்டர்கள் குழு ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் தனித்தனியாக பரிசோதனை செய்தனர். அப்போது 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயதுடைய 2 மாணவிகள் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக அழுது கொண்டே டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

    அந்த மாணவிகளை டாக்டர்கள் தனியாக பரிசோதித்தனர். இதற்கு முன்பு எப்போதெல்லாம் வலி ஏற்பட்டது என்றும் கேட்டனர்.

    மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் இரு மாணவிகளும் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

    அதிர்ந்து போன டாக்டர்கள் இந்த தகவலை பள்ளி ஆசிரியைகளுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

    குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் குறிப்பிட்ட சிறுமிகளையும் தனியாக அழைத்து அவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது சிறுமிகள் இருவரும் தங்கள் உறவினர் சரத் (வயது 20) என்பவர் அடிக்கடி இதுபோன்ற சில்மி‌ஷ வேலைகளில் ஈடுபடுவார் என்றனர். பல ஆண்டுகளாக அவர், இதுபோன்ற செயல்களை செய்ததாகவும், தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மஞ்சு, இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சரத் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போஸ்கோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

    2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சரத் தலைமறைவாகி விட்டார். அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் மற்றும் போலீசார் சரத்தை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×